மைசூரில் நடனப் பள்ளி துவங்குகிறார் பிரபுதேவா

கர்நாடக மாநிலம் மைசூரில் நடனப் பள்ளியைத் துவங்கவுள்ளார் நடிகரும், டான்ஸ் மாஸ்டரும், இயக்குநருமான பிரபுதேவா.



டான்ஸ் மாஸ்டராக இருந்த பிரபு தேவா இந்து படத்தின் மூலம் திடீரென நடிகர் ஆனார். நடனத்தில் காட்டிய கவனம் மாறி, நடிப்பில் மும்முரமாகிவிட்டார். நடிப்பு சான்ஸ் குறைந்தபோது, திடீரென டைரக்டர் ஆகிவிட்டார்.


தெலுங்கிலும், தமிழிலும் ஹிட் படங்களைக் கொடுத்தார்.
இப்போது அடுத்த கட்டமாக சர்வதேச நடன பள்ளி தொடங்கும் முயற்சியில் ரகசியமாக இறங்கி உள்ளாராம். இதனால் பெரும்பகுதி கவனத்தை இந்த பள்ளிக்கூடத்தின் மேல் செலுத்த ஆரம்பித்திருக்கிறாராம்.

மைசூரில்தான் இந்த பள்ளியை அவர் தொடங்க உள்ளார். வெளிநாடுகளில் இதன் கிளைகளை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். துபாயில் உள்ள நயன்தாராவின் அண்ணனும் பிரபு தேவாவின் இந்த புரொஜெக்ட்டில் அவருக்கு உதவியாக உள்ளாராம். மைசூர்தான் பிரபுதேவாவுக்கு சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Response to "மைசூரில் நடனப் பள்ளி துவங்குகிறார் பிரபுதேவா"

Post a Comment