ராவணன் : ஒரே நாளில் ரூ.20 கோடி வசூல்!
மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள ராவணன் படம் முதல் நாளில் ரூ.20 கோடியை உலக அளவில் வசூலித்துள்ளதாக ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியில் அபிஷேக் பச்சனை நாயகனாகக் கொண்டும் தமிழில் விக்ரமை நாயகனாகக் கொண்டும் மற்றும் தெலுங்கிலும் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
படத்தின் முக்கிய கேரக்டர்களில் விக்ரம், அபிஷேக், ஐஸ்வர்யா
ராய், கார்த்திக் தவிர பிருத்விராஜ், பிரபு, பிரியா மணி, ரஞ்சிதா, முன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ராய், கார்த்திக் தவிர பிருத்விராஜ், பிரபு, பிரியா மணி, ரஞ்சிதா, முன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.வெள்ளிக்கிழமையன்று தமிழ், தெலுங்கு , இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் இப்படம் திரைக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் 2200 தியேட்டர்களில் இப்படத்தை ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.
இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.20 கோடி என ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.
Colombo Time
0 Response to "ராவணன் : ஒரே நாளில் ரூ.20 கோடி வசூல்!"
Post a Comment