மணிரத்தினத்திற்கு ஜாகர் லேகோல்ட் குளோரி விருது

இயக்குநர் மணிரத்தினத்திற்கு வெனிஸ் பட விழாவில் ஜாகர் லேகோல்ட் குளோரி (Jaeger-LeCoultre Glory) விருது அளிக்கப்படுகிறது.

செப்டம்பர் மாதம் வெனிஸ் திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் மணிரத்தினத்தின் ராவண் படம் திரையிடப்படவுள்ளது. அப்போது மணிரத்தினத்திற்கு ஜாகர் லே கோல்ட் குளோரி விருது அளிக்கப்படும் என வெனிஸ் பட விழா இயக்குநர் மார்கோ முல்லர் தெரிவித்தார்.

கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் விழாவின்போது இதுகுறித்து முல்லர் கூறுகையில்,மணிரத்தினம் இந்திய சினிமாவின் மிகச் சிறந்த சிற்பிகளில் ஒருவர். தனது நவீனப் படைப்புகளின் மூலம் பாலிவுட்டுக்கு சிறந்த பங்களிப்பை அவர் செய்துள்ளார்.

அப்படிப்பட்ட மிகச் சிறந்த இயக்குநரான மணிரத்தினத்திற்கு ஜாகர் லே கோல்ட் விருது அளிப்பதில் பெருமை கொள்கிறோம் என்று கூறினார்.

0 Response to "மணிரத்தினத்திற்கு ஜாகர் லேகோல்ட் குளோரி விருது"

Post a Comment