மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்!

நடிகர் அஜீத் மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கிறார். இதற்காக இன்று வெள்ளிக்கிழமை இருங்காட்டுக்கோட்டையில் நடந்த பயிற்சியில் அவர் பங்கேற்று கார் ஓட்டினார். அதைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.கார் பந்தயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அஜீத். நடிப்பைவிட கார் பந்தயத்தையே அதிகம் விரும்பிய அவர், ஒரு கட்டத்தில் 6 மாதங்கள் நடிப்பு, 6 மாதங்கள் ரேஸ் என்று அறிவித்தார்.


ஆனால் படங்கள் தொடர்ந்து அடிவாங்க, கோடம்பாக்கத்தில் இடத்தைத் தக்கவைப்பதே முக்கியம் என அவருக்கு நெருக்கமானவர்கள் அறிவுரை கூறினர்.இதனால் எப்போதாவது ஆசைக்கு ஒரு முறை ரேஸ் கார்களை ஓட்டிப் பார்த்துக் கொள்வார். அந்த வகையில் மீண்டும் ஒரு முறை கார் பந்தயத்தில் பங்கேற்கிறார் அஜீத்.எம் ஆர் எப் சேலன்ஞ் 2010 என்ற பெயரில் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இருங்காட்டுக் கோட்டையில் சிறப்பு கார் பந்தயம் நடக்கிறது.



இதற்கான ‘வார்ம் அப் போட்டி’ இன்று வெள்ளிக்கிழமை சென்னை மோட்டார் ரேஸ் ட்ராக்கில் நடந்தது. அஜீத் இந்த போட்டியில் பங்கேற்று 1600 சிசி எம்ஆர்எப் பார்முலா காரை ஓட்டினார். அவருக்கு எம்ஆர்எப் பிராண்ட் அம்பாஸிடர் நரேன் கார்த்திகேயன் மற்றும் அஸ்வின் சுந்தர் ஆகியோர் உதவினர்.ஞாயிற்றுக் கிழமையன்று நடக்கும் இறுதிப் போட்டியில் அஜீத்தும் பங்கேற்கிறார் என எம்ஆர்எப் செய்திக் குறிப்பு கூறுகிறது.


இந்த இறுதிப் போட்டியின் உணவு இடைவேளையில் பிரபல பாடகர்கள் ஷாலினி சிங் மற்றும் கார்த்திக் பாடுகிறார்கள்.ஆக.. வருகிற ஞாயிற்றுக்கிழமை காதலும் ஆக்ஷனும் கலந்த தினமாக இருக்கும், சென்னை ரசிகர்களுக்கு!

0 Response to "மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்!"

Post a Comment