ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி!

தனது நெருங்கிய நண்பர் கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் நடித்த கடைசி படமான ஆப்த ரக்ஷகாவை பார்த்து கண் கலங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.ஏவிஎம் பிரிவியூ திரையரங்கில் இந்தப் படத்தை நேற்று முன்தினம் பார்த்தார் ரஜினி. அவருடன் படத்தின் இயக்குநர் வாசுவும் இருந்தார்.


சில ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடித்து வெளியான சந்திரமுகி வெளியாகி வசூலிலும், அதிக நாட்கள் ஓடியதிலும் புதிய சாதனையைப் படைத்தது. தமிழ் சினிமாவின் 75 ஆண்டுகளால வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் சந்திரமுகி மட்டுமே.விஷ்ணு வர்தன் நடித்த ஆப்தமித்ரா கன்னடப் படத்தின் ரீமேக்தான் சந்திரமுகி.இப்போது ஆப்தமித்ராவின் இரண்டாம் பாகமான ஆப்தரக்ஷகா தயாராகியுள்ளது.

பி வாசு இயக்க விஷ்ணுவர்தன் நடித்துள்ளார். அவர் நடித்த கடைசி படம் இதுவே. இந்தப் படம் முடிந்ததுமே விஷ்ணுவர்தன் மரணமடைந்துவிட்டார்.விமலாராமன், சந்தியா, லட்சுமி கோபாலசாமி, சீனிவாசமூர்த்தி, வினித், கோபால்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த இரண்டாம் பாகத்தை சந்திரமுகியின் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும், அதில் ரஜினி நடிக்க வேண்டும் என விரும்பினார் வாசு. ஆனால் இதற்கு ரஜினி ஆரம்பத்திலிருந்தே பிடிகொடுக்காமல் இருந்தார்.


கருத்து எதுவும் கூறவில்லை அவர். ஆனால் இந்தப் படம் எப்படி வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் ரஜினி.இந்த நிலையில், இந்த படத்தை ரஜினிக்கு சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் உள்ள பிரிவியூ தியேட்டரில் சிறப்பு காட்சியாக திரையிட்டுக் காட்டினார்கள். படத்தைப் பார்த்து முடித்ததும் இயக்குநர் பி வாசுவை கட்டித் தழுவிப் பாராட்டிய ரஜினி, ‘ரொம்ப பிரமாதம்பா’ என்று புகழ்ந்தார்.குறிப்பாக கடைசி 10 நிமிட காட்சிகளில் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது படம் எனப் பாராட்டினார்.


சந்திரமுகி பாகம் -2 அல்லது வேட்டையன் என்ற பெயரில் இந்தப் படத்தை தமிழில் எடுக்க பி வாசு திட்டமிட்டுள்ளார்.இந்தப் படத்திலும் ரஜினி நடிக்க வேண்டும் என்று வாசு தன் விருப்பத்தை மீண்டும் கூற, ரஜினி முடிவு எதுவும் சொல்லாமல், வாசுவை தட்டிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம்.ரஜினி படம் பார்த்த பிறகு, சிவாஜி பிலிம்ஸ் உரிமையாளர்கள் பிரபு, ராம்குமார் ஆகியோருக்கும் ஆப்த ரக்ஷகா திரையிட்டுக் காட்டப்பட்டதாம். படத்தைப் பார்த்து வாசுவைப் பாராட்டினார் ராம்குமார்.‘அண்ணன் (ரஜினி) சரின்னா, இப்பவே பூஜைக்கு நாங்க தயார்’ என்றார் பிரபு.அண்ணன் முடிவு என்னவோ..!

0 Response to "ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி!"

Post a Comment