சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா

சிம்பு திரிஷா முத்தக்காட்சி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து முத்தக்காட்சிகளில் நடிப்பீர்களா என்று திரிஷாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:


முத்தக்காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கதைக்கு தேவை என்பதால் சிம்புவை முத்த மிட்டேன். அதில் தவறல்ல.இது போன்ற காட்சிகள் கதையை பொறுத்தும் டைரக்டர் விருப்பத்தை பொறுத்தும் அமைகின்றன. இயக்குனர் சொல்படி நான் நடிக்கிறேன்.


திரையுலகில் ஒரு நிலையை எட்டி விட்டேன். முத்த காட்சிகள், நீச்சல் உடை காட்சிகளில் நடிக்க மறுத்தால் தகுதி குறைவாக ஆகிவிடும்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் என் கேரக்டரை பாராட்டி மெயிலில் வாழ்த்துக்கள் குவிகின்றன. அவர்களுக்கெல்லாம் பதில் அனுப்பி வருகிறேன். நிறைய படங்களில் நடித்துள்ளேன்.

இதற்கு முன் இவ்வளவு பாராட்டுகள் வந்ததில்லை.“ஜெஸ்சி” போன்ற கதாபாத்திரங்கள் அமைவது அபூர்வமானது.ரவிதேஜாவுடன் தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தனர். நானும் சம்மதித்தேன். ஆனால் அதற்கு மொத்தமாக நிறைய நாட்கள் கால்ஷீட் கேட்டனர். வேறு படங்களில் நடிக்க வேண்டி இருப்பது பற்றி சுட்டி காட்டினேன். பிறகு அப்படத்தில் இருந்து விலகி விட்டேன்.

எனக்கு பதில் ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்து இருப்பது பற்றி எனக்கு தெரியாது.கமல் என்னை அழைத்து யாவரும் கேளிர் பட கேரக்டர் பற்றி சொன்னார். அப்படத்தில் நான் வித்தியாசமாக தெரிவேன். என் உடைகளை புதிய ஆடை வடிவமைப்பாளரை வைத்து தயார் செய்கிறார்கள். கமல் எதையும் கச்சிதமாக செய்யக்கூடியவர். படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே தயார்படுத்திக்க சொல்வார்.

0 Response to "சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா"

Post a Comment