சுஷ்மிதா சென் தத்தெடுத்த பெண் குழந்தை

1994-ல் உலக அழகி பட்டத்தை வென்றவர் சுஷ்மிதானசென். 1996-ல் 'தஸ்தக்' படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.


அர்ஜூன் நடித்த 'முதல்வன்' படத்தில் 'சக்கலக்க பேபி சக்கலக்க பேபி லுக்கு விட தோணலையா' என்ற ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். நாகார்ஜூன் ஜோடியாக “ரட்சகன்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். கமல் எடுக்கும் “மர்மயோகி” படத்தில் இவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.



சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதே நேரம் குழந்தைகள் மீது பிரியம். இதையடுத்து “ரீனி” என்ற பெண் குழந்தையை தத்து எடுத்தார். அக்குழந்தையை தன்னை போல் அழகிப் போட்டிகளில் பங்கெடுக்க செய்ய பயிற்சிகள் அளித்து வருகிறார். தற்போது அலிஷா என்ற இன்னொரு மூன்று வயது பெண் குழந்தையையும் தத்து எடுத்துள்ளார். அக்குழந்தையை மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றுக்கு அழைத்து வந்து பார்வையாளர்களுக்கு காண்பித்தார்.


மாணவ்மேனன் என்பவரை சுஷ்மிதா காதலித்தார். இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். தனிமையை குழந்தைகளுடன் கழிக்கிறார்.

0 Response to "சுஷ்மிதா சென் தத்தெடுத்த பெண் குழந்தை"

Post a Comment