'ஆயிரத்தில் ஒருவன்’ தோல்வி காரணம் என்ன?


தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்துக் கொண்டிருந்த செல்வராகவனுக்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ தந்தது அதிர்ச்சித் தோல்வி.

சில வருடங்களை செலவிட்டு எடுக்கப்பட்ட படம் தான் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படப்பிடிப்பு கிராபிக்ஸ் என இதற்காக மெனக்கெட்ட செல்வராகவன் படம் முடிவடைந்து வெளியிடும் நேரத்தில் விக்ரமின் கால்ஷீட் கிடைக்க அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கினார். இதனால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் இருந்து செல்வராகவனின் கவனம் சிதறியது.

ஒரு கட்டத்தில் ஆயிரத்தில் ஒருவன் போஸ்ட் புரடக்க்ஷன்ஸ் வேலைகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். அதன் பிறகு அந்தப் படத்தின் தயாரிப்பாளர்தான் இதற்கு மேலும் விட்டால் அவ்வளவுதான் என்ற எண்ணத்தில் தாமே முன்னின்று அனைத்து வேலைகளையும் முடித்து படத்தை வெளியிட்டார். மேலும் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதில் பத்து சதவீதத்தை கூட ‘ஆயிரத்தில் ஒருவன்’ பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

0 Response to "'ஆயிரத்தில் ஒருவன்’ தோல்வி காரணம் என்ன?"

Post a Comment