எங்கே போனார் பானு?

‘தமிரபரணி’ படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த பானு, கேரள வரவு என்பதால் நயன்தாராவுக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பார் என்றுதான் பலரும் நினைத்திருந்தார்கள்.




அந்த படமும் நன்றாக ஓடியது. ஆனால் நயனுக்கு பின்னால் இவர், பல கிலோமீட்டர்கள் தூரத்தில் பின்னுக்கு இருந்தார். இவருக்கு அதற்குப் பின்பு வந்த வாய்ப்புகள் ஒன்றிரண்டு என்றாலும் அதையும் கதை சரியில்லை அது... இது... ஏதேதோ சரியில்லை... என்று வந்தவர்களை விரட்டி அனுப்பினார். தமிழில் அதற்குப் பிறகு இவர் ஆர்.கே.யுடன் இணைந்து நடித்த படம் ‘அழகர்மலை’. பேருதான் ‘அழகர்மலை’ ஆனால், படம் அழகா இல்லையே... என்ன பண்றது. இந்தப் படம் ஓடாததால் மார்க்கெட் சுத்தமாக அவுட்டாகி விட இப்போது வீட்டில் உட்காரந்து கேரம் ஆடிக்கொண்டிருக்கிறார் பானு. கவலைப்படாதீங்க... உங்களுக்குன்னு ஒரு கதையை தமிழ்சினிமா இயக்குநர்கள் தயார் பண்ணி எடுத்துட்டு வராமலாப் போயிடுவாங்க...!

0 Response to "எங்கே போனார் பானு?"

Post a Comment