தோளில் கை போட்ட சூப்பர் ஸ்டார் - பரவசப்படும் ஆட்ட நாயகன்

மீண்டும் இயக்குனராகிறார் லாரன்ஸ். அநாதை ஆசிரமம், இருதய நோயாளிகளுக்கு வாழ்வு, ராகவேந்திரா கோவில் என்று பல்வேறு சமுதாய, ஆன்மீக பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், இயக்குனர் ஆசையை விடவே இல்லை அவர்.


தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய லாரன்ஸ், தமிழில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார். இவரேதான் அதில் ஹீரோ என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.


புதுப்படம் எது மாதிரியான கதையமைப்பு கொண்டது என்பதையெல்லாம் பிறகு அலசுவோம். முதலில் அவர் முடிவெடுத்திருக்கிற விஷயம்... ரஜினி போலவே மேனரிசம் செய்வதை இந்த படத்திலாவது விட வேண்டும் என்பதுதானாம். பாண்டி படத்தை பார்த்த பலரும் லாரன்சிடம் அப்படியே ரஜினியை காப்பியடிக்கணுமா? உங்களுக்குன்னு தனி ஸ்டைல் வேண்டாமா? என்றார்களாம். யோசித்து பார்த்த லாரன்ஸ் அதுவும் சரிதான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.



எந்திரன் படத்தில் ஒரு பாடலை ரஜினிக்காக டான்ஸ் கம்போஸ் செய்திருக்கிறார். படப்பிடிப்பில் அவரை ஆட்டி வைத்தாலும், ஆஃப் லைட்டுக்கு பின்னே பம்மிக் கொண்டு நிற்பாராம் சூப்பர் ஸ்டாரிடம். “படக்குன்னு தோளில் கை போட்டு பேசுவாரு. அப்படியே ஆடிப் போயிருவேன். அந்த நேரத்திலே உடம்பெல்லாம் மின்சாரம் ஓடினா மாதிரி இருக்கும். அந்த ஃபீலிங் இருக்கே... அது தனி” என்று சொர்கத்துக்கே போகிறார் ரஜினி பற்றி பேசினால். சென்னையில் எட்டு கிரவுண்டில் கட்டி வரும் மந்த்ராலயத்தை எப்போ திறக்கப் போறீங்க என்றால், “ரஜினி சார் ஒரு கரெக்ஷன் சொல்லியிருக்காரு. அதை செஞ்சுகிட்டு இருக்கோம். அது முடிந்ததும் தலைவர் கையால திறந்திட வேண்டியதுதான்” என்றார் லாரன்ஸ். அவர் சொன்ன தலைவர்? ...



ரஜினியேதான்!

0 Response to "தோளில் கை போட்ட சூப்பர் ஸ்டார் - பரவசப்படும் ஆட்ட நாயகன்"

Post a Comment