கடவுள் நம்பிக்கையே என் பலம்; யாருக்கும் பயப்பட மாட்டேன் -நயன்தாரா

பிரபுதேவா, நயன்தாரா காதலுக்கு எதிர்ப்பும், அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. நயன்தாராவை பார்த்தால் அடிப்பேன் என்று பிரபுதேவா மனைவி ரம்லத் எச்சரித்தார். இதனால் காதலை முறித்து விட்டு நயன்தாரா விலகி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்பை விட காதலில் தீவிரம் காட்டுவதாக நெருக்கமானவர்கள் முணுமுணுக்கிறார்கள்.


சமீபத்தில் சென்னையில் நடந்த சினிமா தொழிலாளர் மாநாட்டில் தைரியமாக பங்கேற்றார். டெலிவிஷன் பேட்டி ஒன்றில் பிரபுதேவா பெயரை கையில் பச்சை குத்தியிருப்பது பற்றிய கேள்விக்கு எனக்கு பிடித்தமானவர் பெயரை பச்சை குத்தியுள்ளேன் என்று பகிரங்கமாக அறிவித்தார்.


இருதினங்களுக்கு முன் ஐதராபாத்தில் நடந்த சினிமா விருது வழங்கும் விழாவில் பிரபுதேவாவும் நயன்தாராவும் ஜோடியாக பங்கேற்றனர். இருவரும் அருகருகே அமர்ந்து சிரித்து பேசியது விழாவில் பங்கேற்றோரின் கவனங்களை ஈர்த்தது. மற்றவர்கள் கவனிப்பதை பொருட்டாகவே மதிக்கவில்லை.


நயன்தாராவின் நடவடிக்கைகள் பிரபுதேவா மனைவி ரம்லத்துக்கு ஆத்திரமூட்டியுள்ளது. அவரை திட்டி எஸ்.எம்.எஸ். அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐதராபாத்தில் பேட்டியளித்த நயன்தாரா யாருக்கும் பயப்படமாட்டேன் என்று அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-


எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அதையே என்னுடைய பெரிய பலமாக கருதுகிறேன். நிறைய தன்னம்பிக்கை இருக்கிறது. எனவே எதற்கும் பயப்படமாட்டேன். எனக்குள்ள பெரிய சொத்தே எனது குடும்பத்தினர்தான். பொய் பேசுபவர்களை அறவே பிடிக்காது. அவர்களை வெறுக்கிறேன். என்னுடைய கவர்ச்சி எனது சிரிப்பில்தான் இருக்கிறது என்றார்.

0 Response to "கடவுள் நம்பிக்கையே என் பலம்; யாருக்கும் பயப்பட மாட்டேன் -நயன்தாரா"

Post a Comment