அகராதி கதை என்ன?

வர்னிகா மூவி மேக்கர்ஸ் சார்பில் டி.வரத், சுமதி கல்யாணசுந்தரம் தயாரிக்கும் படம் அகராதி. நாகா வெங்கடேஷ் டைரக்ட் செய்கிறார். படம் பற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அகராதி என்றால் டிக்ஷனரி என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.


ஆனால் இப்படத்தை பொறுத்தவரை அன்பு, கடமை, ராஜ்யம், தியாகி ஆகியவற்றின் முதல் எழுத்தை சுருக்கித்தான் அகராதி என்று வைத்திருக்கிறோம்.

கொலை சம்பவம் ஒன்றில் துப்பறிய வில்லன்போல் வேலைகளை செய்கிறார் ஹீரோ பிரதீப். இரவில் ஒரு வானவில் என்று ராஜேஷ்குமார் எழுதிய நாவலே இப்படம்.

நாவலின் முடிவில் ஹீரோவை பற்றி சொல்லியுள்ள கருத்தை, படத்தில் காட்ட முடியாது என்பதால் சஸ்பென்ஸாக விடப்படுகிறது. ஒரேயரு பாடல் காட்சிக்கு கீர்த்தி சாவ்லா, பாலா நடித்திருக்கின்றனர். வழக்கறிஞராக நடித்திருக்கிறார் நேத்ரா. இப்படம் புதுடிரெண்ட்டை ஏற்படுத்தும்.

0 Response to "அகராதி கதை என்ன?"

Post a Comment