தேவயானியை முற்றுகையிட்ட மலைவாழ் பெண்கள்
ஏற்காட்டில் டிவி தொடரின் படப்பிடிப்பு நடந்தது. இதில் கலந்து கொள்ள நடிகை தேவயானி மற்றும் டிவி நடிகை, நடிகைகள் வந்து இருந் தனர். பின்னர் இவர்கள் எஸ்டேட் பங்களாக்களில் தங்கினர்.
இந்த தொடரின் படப்பிடிப்பு சனிக்கிழமை மாலை ஏற்காட்டில் இருந்து பக்கோடா பாயிண்ட் செல்லும் வழியில் நடந்தது.
இங்குள்ள காபி எஸ்டேட்டில் நடிகை தேவயானி பையை எடுத்து கொண்டு நடந்து செல்வது போன்று படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பை அறிந்த திரளான மலைவாழ் பெண்கள் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு வந்தனர்.
இவர்கள் அனைவரும் படப்பிடிப்பு நடந்த இடம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். கூட்டம் சேருவதை அறிந்த தேவயானி, மலைவாழ் பெண்களிடம் வந்து நலம் விசாரித்தார். தொடரில் நீங்கள் நன்றாக நடித்து வருகிறீர்கள். உங்களுக்காகவே தொடரை பார்த்து வருகிறோம் என்று பெண்கள் தேவயானியிடம் கூறினர்.
பின்னர் அவர்கள் தேவயானியின் கையை பிடித்து வாழ்த்து கூறினர். பிறகு தேவயானி படப்பிடிப்பை பார்க்க வந்தவர்களிடம், படப்பிடிப்பு நடக்க உங்கள் ஒத்துழைப்பு தாருங்கள் என கூறி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
இதனால் படப்பிடிப்பை காணவந்த பெண்களும், பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் படப்பிடிப்பு நடந்தது.
இந்த தொடரின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்திற்கு ஏற்காட்டில் நடக்க இருக்கிறது.
Colombo Time
0 Response to "தேவயானியை முற்றுகையிட்ட மலைவாழ் பெண்கள்"
Post a Comment