சிங்கள படத்தில் சூர்யா

மறுபடியும் மாட்டுகிறார் சூர்யா. முன்பு மாட்டியது வாய்க்கொழுப்பினால். இப்போது மாட்டப்போவது தேவையில்லாமல் கொடுத்த கால்ஷீட்டினால். கோடம்பாக்கத்தை குலுங்க வைக்கப் போகும் அந்த தகவல் இதுதான்.


தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு எதிராகவும், சிங்களர்களுக்கு எதிராகவும் பல வருடங்களாக குரல் கொடுத்து வருகிறது தமிழகம். சில மாதங்களுக்கு முன் தமிழர்களுக்கு எதிராக படம் எடுத்து அதை சென்னையில் உள்ள லேப்பில் பிரிண்ட் போட வந்த சிங்கள இயக்குனர் ஒருவருக்கு அடி-உதை விழுந்ததெல்லாம் கூட சூர்யாவின் காதுகளுக்கு எட்டவில்லை போலும். சிங்கள இயக்குனர் சுரேஷ் குமார் சிங்கை என்பவர் இயக்கப் போகும் சிங்கள படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். படத்தின் பெயர் தேவதாசி என்றும் சொல்லப்படுகிறது.




சூர்யா-சிம்ரன் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் இலங்கையில் துவங்குகிறதாம். சிங்களன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க தமிழரான சூர்யா எப்படி ஒப்புக் கொண்டார் என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த படத்தில் அவர் நடித்தால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது இந்து மக்கள் கட்சி.



வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்குமாம்!

0 Response to "சிங்கள படத்தில் சூர்யா"

Post a Comment