நயன்தாரா வேண்டாம்... அலறும் சல்மான், ஜெயம் ரவி

வடக்கே தலையை காட்டு... தெற்கே தீயை மூட்டு...ங்கிற மாதிரி பரபரப்பா இயக்கிக் கொண்டிருக்கிறார் பிரபுதேவா. இந்தியில் வாண்டட் படத்தின் ஹிட்டை தொடர்ந்து சல்மான்கானை வைத்து மோஸ்ட் வாண்டட் என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார்.


இதில் நயன்தாராவை சல்மானுக்கு ஜோடியாக்கிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். அப்படியே தமிழில் ஜெயம் ரவியை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறாராம். இங்கேயும் நயன்தாராவை ரவிக்கு ஜோடியாக்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டாராம். (ம்ம்க்கூம்...)



அலாவுதீன் கண்ணுக்கு வேணும்னா பூதமே ஃபிகரா தெரியலாம். அடுத்தவங்களுக்கு தெரியணுமா என்ன? “வேண்டாம், ஆளை விடுங்க” என்று அலறுகிறார்களாம் சல்மான்கானும், ஜெயம் ரவியும். சல்மான் கேட்பது அசினை. ஜெயம் ரவியோ, யாரை வேணும்னாலும் ஜோடியா போடுங்க. ஆனால் நயன்தாரா வேண்டாம் என்கிறாராம். இதில் பயங்கர அப்செட்டாகியிருக்கிறார் பிரபுதேவா.


சல்மான்கானிடம் சண்டை போட முடியாது. ஆனால் ஜெயம் ரவி விஷயத்தில் அப்படியல்ல. “நயன்தாராதான் ஹீரோயின். இல்லைன்னா இந்த படமே வேண்டாம்” என்று மிரட்டுகிறாராம். பேராண்மை ஹிட்டுக்கு பிறகு ஜெயம் ரவியை கொண்டாட தயாராக இருக்கிறது தமிழுலகம். பிரபுதேவா இல்லென்னாலும் என்னால நல்ல படத்தை செலக்ட் பண்ண முடியும் என்கிற அளவுக்கு போயிருக்கிறாராம் ரவி.



பெண்ணால சில சமஸ்தானங்களே உடைஞ்சிருக்கு. பாவம் பிரபுதேவா...

0 Response to "நயன்தாரா வேண்டாம்... அலறும் சல்மான், ஜெயம் ரவி"

Post a Comment