அடுத்த படத்துக்கு கதை ரெடி - இயக்குநர் பாண்டிராஜ்

'பசங்க' என்னும் வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் பாண்டிராஜ். புதுமுங்களை வைத்து இவர் எடுத்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தப் படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.


‘சிறுவர்களுக்குள் இருக்கும் போட்டிகள், பொறாமைகள் எல்லாம் ஒவ்வொரு மனித வாழ்க்கையி்லும் நடக்கும் சம்பவங்கள். அது ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய சிறுவயது ஞாபகங்களை வரவழைப்பதாக இருந்தது’ என்று நிறையபேர் பாண்டிராஜை பாராட்டிவிட, மனிதர் ஏகப்பட்ட சந்தோஷமாகிவிட்டார். ‘என்னுடைய அடுத்த படத்தையும் நன்றாக எடுத்து 'பசங்க' படத்தின் மூலம் கிடைத்த பெயரை தக்கவைத்துக்கொள்வேன். என்னுடைய அடுத்த படத்தின் கதையை நான் என்னுடைய சொந்த ஊரில் இருந்தே எழுதி வருகிறேன். இப்போது எடுக்கப்போகும் படம் 'பசங்க' படத்திலிருந்து மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். இதிலும் சில புதுமுகங்களை அறிமுகப்படுத்தப் போகி்றேன். இந்தப் படம் நகைச்சுவை படமாக இருக்கும். இந்த படத்தி்ன் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கும்.’ என்கிறார் பாண்டிராஜ்.

0 Response to "அடுத்த படத்துக்கு கதை ரெடி - இயக்குநர் பாண்டிராஜ்"

Post a Comment