ஜாலி + கலர்புல் = கோவா : சௌந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் கோவா. தான் ஆக்கர் ஸ்டுடியோஸ் மூலம் திரையுலகில் கிராபிக்ஸ் துறையில் தனி அடையாளம் பெற்று முத்திரை பதித்தவர். கோவா மூலம் ஒரு தயாரிப்பாளராகக் காலடி எடுத்து வைக்கிறார்.


இனி தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த்...

தயாரிப்பாளராகும் எண்ணம் எப்படி வந்தது?


முதலில் பத்து பேருடன் 3 1/2 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது ஆக்கர் ஸ்டுடியோஸ் இன்று 120 பேர் கொண்டதாக வளர்ந்துள்ளது. கிராபிக்ஸ், டிஜிட்டல், எடிட்டிங், அனிமேஷன் என்று விரிந்து அடுத்த கட்டமாக தயாரிப்பில் இறங்கியுள்ளது. சினிமா தயாரிப்பு மூலம் இளைஞர்களுக்கு, திறமைசாலிகளுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் கொடுக்க முடியும். அதனால் தான் இதில் இறங்க முடிவெடுத்தேன்.


முதல் படம் 'கோவா' என்று எப்போது எப்படி முடிவு செய்தீர்கள்?


'சென்னை - 28' எனக்கு மிகவும் பிடித்த படம். அதன் கிராபிக்ஸ் என் ஸ்டுடியோவில் நடந்தது. வெங்கட் பிரபுவின் கிரியேட்டிவிட்டி வேலை பார்க்கும் பாணி எனக்கும் பிடிக்கும். எல்லாரிடமும் நட்புடன் பழகுவார். மொத்த யூனிட்டையுமே அப்படித்தான் வைத்திருப்பார், 'சரோஜா'வுக்கு முன்பே நான் அவரை வைத்து தயாரிப்பது என்று முடிவு செய்து விட்டேன். வேலைகளும் ஆரம்பித்தாயிற்று. படப்பிடிப்புதான் 'சரோஜா' முதலில் தொடங்கப்பட்டது.



'கோவா' கதை எந்த வகையில் உங்களுக்குப் பிடித்தது?


வெங்கட் பிரபுவைப் கேட்டால் தன் படத்தில் கதை எதுவும் இல்லை என்பார். ஆனால் நல்லகதை இருக்கும். 'சென்னை - 28, 'சரோஜா', ஓரூ இரவில் நடக்கும் த்ரில்லர்... அது போல 'கோவா' விலும் வித்தியாசமாக ஒரு லவ் ஸ்டோரி உள்ளது. உயிரோட்டமுள்ளதாக யதார்த்தமாக ஒரு விஷயம் இருக்கிறது.


'கோவா' படத் தலைப்பு பற்றி...?



இந்தியாவில் நல்லதொரு ஹாலிடே டெஸ்டினேஷன் கோவாங்கிற ஊர் என்பது உலகம் முழுக்கத்தெரியும். மிக எளிமையாக எல்லாரையும் சென்றடைந்துள்ள பெயர் இது. இந்தப் படத்தின் கதையும் கோவாவில்தான் நடக்கிறது. இது மட்டுமல்ல கோவா என்றலே அங்குள்ள ஜாலி, கலர் ஃபுல்னஸ் நினைவுக்கு வரும். படமும் ஜாலியாக இருக்கும். காமெடியும் இருக்கும் யூத் ஃபுல்லா இருக்கும். ஃபன்னியா-ஜாலியா இருக்கிற லவ் ஸ்டோரி இது



' வெங்கட் பிரபுவுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி...?


வெங்கட் பிரபு என்னைப்போல் ஒருவர் என்பேன். என்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் நான் எப்படி நட்புடன் பழகுகிறேனோ அப்படித்தான் வெங்கட்டும். எங்கள் டீமிலும் ஏற்றத்தாழ்கள் இருக்காது. அப்படி தான் அவரது யூனிட்டும் இருக்கும். எல்லாரும் ஃப்ரண்ட்லியா இருப்பது எனக்குப் பிடித்தது. ஒரு படம் நன்றாக வர தயாரிப்பாளர் இயக்குநருக்கும் இடையில் கூட கெமிஸ்ட்ரி நன்றாக இருக்க வேண்டும். எங்களுக்குள் நல்லமுறையில் கெமிஸ்ட்ரி இருந்தது.



' உங்களுக்குள் கருத்து வேறுபாடுகளே ஏற்பட்டதில்லையா?



அப்படி எதுவும் ஏற்படவில்லை என்று நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எங்களுக்குள் நிறைய அப் அண்ட் டவுன்ஸ்... ஏற்ற இறக்கங்கள் கோவாவில் இருந்தது. ஆனால் பேசினால் சரியாகி விடும். எந்தப் பிரச்சினைக்கும் உட்கார்ந்து பேசினால் விடை கிடைக்கும். எந்த விஷயத்தையும் பேசி சரிசெய்கிற புரிதல் எங்களிடம் இருக்கிறது. அதுதான் மிகவும் முக்கியம்.



ஏற்கனவே ஓர் அனிமேஷன் படத்தை இயக்கி வரும் இயக்குநர் சௌந்தர்யாவின் பங்கு கோவாவில் எந்த அளவுக்கு உள்ளது?


நான் இயக்கி வரும் 'சுல்தான் தி வாரியார்' அனிமேஷன் படம் 75% முடிந்துள்ளது. கோவாவில் நான் தயாரிப்பாளர் மட்டும்தான் கதையை தெளிவாகக் கேட்பேன். சந்தேகமில்லாமல் கதை என்னை திருப்தியடையச் செய்துவிட்டால் அதன்பிறகு எந்தத் தலையீடும் செய்வது தவறு. தனக்குப் பிடித்த கதை ஒழுங்காக வர தயாரிப்பாளர் செய்யும் பெரிய விஷயம் பணம் செலவு செய்வது மட்டுமல்ல. எந்தவித குறுக்கீடும் செய்யாமல் இருப்பதும்தான். நானும் ஓர் இயக்குநராக இருப்பதால் என் யோசனை, கருத்துக்களின் எல்லை எதுவரை என்கிற அளவு எனக்குத் தெரியும்".



படப்பிடிப்பு அனுபவங்கள்...?



கோவா'வில் நடக்கும் கதை இது. மீண்டும் போன போது கோவாவில் மழை பிடித்துக் கொண்டது.அதனால் அதே மாதிரி மலேஷியாவிலுள்ள லங்காவி என்கிற இடத்தில் 45 நாட்கள் 150 பேர் போய் படப்பிடிப்பு நடத்தி வந்தோம். வெங்கட் பிரபு டீமே ஒரு ஜாலிடீம். யாருமே கஷ்டப்பட்டு வேலை செய்வது போலத் தெரியாது. எல்லாருமே இஷ்டப்பட்டு வேலை செய்வார்கள். முதலில் அவரது டீம் எப்போது ஜாலியாக இருப்பவர்கள். எப்போது சீரியஸாக இருப்பார்கள் என்கிற குழப்பம் எனக்கு இருந்தது. பயமாகக் கூட இருந்தது. போகப் போக புரிந்து கொன்டு விட்டேன். மலேஷியாதவிர மதுரை, தேனி போன்ற இடங்களுக்கும் படப்பிடிப்புக்கு போய் வந்தேன். எனக்கும் சந்தோஷமான அனுபவமாக இருந்தது. கோவா 75% முடிந்துள்ளது. இதுவரை எனக்கு எந்தவித சுமையும் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது. என் முதல் படம் வெங்கட்பிரபுவின் படமாக இருந்தது மிகவும் சந்மேதஷமான விஷயம்".



நீங்கள் ஆக்கர் ஸ்டுடியோஸ் வைத்துள்ளீர்கள். கோவாவில் கிராபிக்ஸ் கலக்கல் இருக்குமா?



கதைக்குத் தேவைப்படமால் கிராபிக்ஸ் வைத்தால் அது நன்றாக இருக்காது, ஏதாவது எடுத்து விட்டு கிராபிக்ஸைத் திணித்து விடலாம் என்று நினைக்கக் கூடாது. 'கோவா'வில் அவசியமான இடங்களில் கிராபிக்ஸ் இருக்கும். கிராபிக்ஸ் பயன்படுத்தியிருப்பது தெரியாதபடி இருக்கும். உற்சாகம் கொப்பளிக்க கலகலப்பாகக் பதிலளித்த சௌந்தர்யாவிடம் பேச்சில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.


'ஆக்கர் பிக்சர் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் 'கோவா' வேகமாக வளர்ந்து வருகிறது,

0 Response to "ஜாலி + கலர்புல் = கோவா : சௌந்தர்யா ரஜினிகாந்த்"

Post a Comment