சிம்புவின் ‘வாலிபன்’

சிம்பு கௌதம்மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் மிகவும் அமைதியான கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் த்ரிஷா.
ஏற்கனவே சிம்புவும் த்ரிஷாவும் இணைந்து அலை என்ற படத்தில் நடித்திருந்தார்கள்.
இந்தப் படம் ப்ளாப் ஆனது. இப்போது, மீண்டும் சேர்ந்திருக்கிறது இந்த ஜோடி. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் சிம்பு அடுத்து, ‘வாலிபன்’ படத்திற்கான கதைவிவாதத்தில் ஈடுபடுகிறார். அதைத் தொடர்ந்து விரைவில் ‘வாலிபன்’ படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிகிறது.

0 Response to "சிம்புவின் ‘வாலிபன்’"

Post a Comment