ஆக்கர் ஸ்டுடியோ பற்றி சௌந்தர்யா

ரஜினி மகள் சௌந்தர்யா ஆக்கர் ஸ்டுடியோ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த ஸ்டுடியோ பற்றி சௌந்தர்யா, ‘சினிமாவுக்கு கிராபிக்ஸ் வேலைகள், டிஜிட்டல் எடிட்டிங், கலர் கிரேடிங், அனிமேஷன் என்று பல தடங்களில் முத்திரைப் பதித்து வருகிறோம்.


சினிமா தயாரிப்பிலும் இறங்கிவிட்டோம் ஆக்கர் ஸ்டுடியோஸ் சார்பில் படங்கள் தயாரிக்கிறோம். முதல் படமாக ‘கோவா’வைத் தயாரிக்கிறோம். வெங்கட்பிரபு இயக்கிக் கொண்டிருக்கிறார். அடுத்து, ஏராளமான கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தைத் தொடர்ந்து எங்களது அடுத்த படத்தின் தயாரிப்புப் பணியைத் துவக்குவோம். பல புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பளிக்க ஆசைப்படுகிறேன். அதற்கான திட்டங்களுடன் செயல்படவிருக்கிறோம். அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கான நல்லதொரு ப்ளாட் பார்மாக எங்கள் ஆக்கர் ஸ்டுயோ இருக்கும்...’ என்கிறார்.

0 Response to "ஆக்கர் ஸ்டுடியோ பற்றி சௌந்தர்யா"

Post a Comment