தயா‌ரிப்பாளரை அதிர வைத்த சோனியா

செல்வாவிடமிருந்து திருமண பந்தத்தை துண்டித்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை சோனியா அகர்வாலிடம் துளிர் விட்டிருக்கிறது.

திருமணம் ஆன பிறகு தொலைக்காட்சி தொட‌ரில் சோனியா நடித்தார் என்ற தகவலை இப்போது நினைவுப்படுத்திக் கொள்வது இந்த மேட்டருக்கு ரொம்பவும் அவசியமானது.



திருமணமான நடிகைகளை தமிழ் சினிமா தீண்டுவதில்லை என்பது சின்ன குழந்தைக்கும் தெ‌ரியும். ஆனானப்பட்ட சிம்ரனாலேயே அந்த விதியை மாற்ற முடியவில்லை.



இந்நிலையில் சோனியா அகர்வாலை ஒப்பந்தம் செய்ய போயிருக்கிறார் ஒரு விசால மனசு தயா‌ரிப்பாளர். அவரது படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட சோனியா சம்பளமாக கேட்டது... மகா ஜனங்களே அதிர்ச்சி அடையாதீர்கள், ஜஸ்ட் அறுபது லட்சங்கள்.



திருமணமாகிவிட்டது, தொலைக்காட்சியில் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார். ஆறு லட்சமே அதிகம் என்ற நினைப்பில் வந்தவருக்கு பே‌ரிடி.



பீக்கில் இருக்கும் நயன், த்‌ரிஷாவே அரை கோடிக்கு ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவுட் ஆஃப் போகஸில் இருப்பவருக்கு அறுபது லட்சமா? துண்டை உதறி தோளில் போட்டவர் அப்படியே எஸ்ஸாகியிருக்கிறார்.



ம்.. நினைப்புதான் பொழப்பை கெடுக்குது.

0 Response to "தயா‌ரிப்பாளரை அதிர வைத்த சோனியா"

Post a Comment