விவேக்குக்கு சப்போர்ட்? வேண்டுகோள் வைக்கும் கவிஞர்!

நவம்பர் 2-ந் தேதி கோர்ட்டுக்கு போக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் அவதூறு நடிகர்கள். அந்த லிஸ்ட்டில் நடிகர் சத்யராஜும் இருக்கிறார்.


அதே தினத்தில் இவர் புதிதாக நடிக்கவிருக்கும் படம் ஒன்றின் பிரஸ்மீட்டுக்கு கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம் (பார்றா...) இப்போது எல்லாவற்றையும் கேன்சல் செய்துவிட்டு கோர்ட்டுக்கு பயணம் போக தயாராகி வருகிறார் ஜட்டி பிரா தமிழன்.



இதற்கிடையில் நமக்கு கிடைத்த இன்னொரு தகவல் ரொம்ப சுவாரஸ்யமானது. முக்குலத்தோர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவேக், எனக்கு எதிராக பத்திரிகையாளர்கள் பேசியும் எழுதியும் வருகிறார்கள். எனது பத்ம ஸ்ரீ விருதை கூட பறிக்க சூழ்ச்சி நடக்கிறது. அதனால் நமது சங்கம் எனக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கெஞ்சினாராம். அதே கூட்டத்தில் கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் கருணாஸ், “அவர் பொது பிரச்சனைக்காக போராடி இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டால் சங்கம் துணைக்கு போகலாம். அவரோ வாய்க் கொழுப்பில் பேசி மாட்டிக் கொண்டார். அதற்கெல்லாம் நாம் துணை போக முடியாது. அவர் பேசியதற்கான பலனை அவரே அனுபவிக்கட்டும்” என்றாராம்.


இதையடுத்துதான் முக்குலத்தோர் சங்கம் விவேக்கை அநாதையாக விட்டிருக்கிறது. நடிகர் சங்கமெல்லாம் ஜுஜுபி. எனக்கு என்னுடைய ஜாதி சங்கம் ஆதரவு தரும் என்று வாய் சவடால் விட்ட விவேக் இப்போது வேறு ஒருவரை நாடியிருக்கிறார். அவர்? இவரது ஜாதியை சேர்ந்த வைரமுத்து! முன்னணி பத்திரிகைகள் சிலவற்றிற்கு நேரடியாக போன் அடித்த வைரம், “ஏதோ தெரியாம பேசிட்டாரு. எனக்காக அவரை மன்னிச்சுருங்களேன்” என்று சிபாரிசு செய்ய ஆரம்பித்திருக்கிறாராம். தனது படங்களிலும், மேடைகளிலும் இந்த வைரத்தையே அறுத்து பார்த்தவர்தான் விவேக். அது தெரியுமா இவருக்கு?

0 Response to "விவேக்குக்கு சப்போர்ட்? வேண்டுகோள் வைக்கும் கவிஞர்!"

Post a Comment