மீண்டும் தேடிப்போய் 'மாட்டிய' விக்ரம்!
அந்நியன் படத்துக்குப் பிறகு சொல்லிக் கொள்கிற மாதிரி படங்கள் எதையும் விக்ரம் தரவில்லை. எந்தப் படமும் அத்தனை சீக்கிரம் வெளியாகவுமில்லை.பதிவுகள் அனைத்தும் இணையத்தில் பார்த்து ரசித்த அன்பர்களுக்கு நன்றி.இவற்றில் உள்ள தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு பயன்உள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அந்நியன் படத்துக்குப் பிறகு சொல்லிக் கொள்கிற மாதிரி படங்கள் எதையும் விக்ரம் தரவில்லை. எந்தப் படமும் அத்தனை சீக்கிரம் வெளியாகவுமில்லை.
சினிமாவில் பிசியாக இருந்தாலும், சின்னத்திரையிலும் நடித்து அதிர்ச்சியை கொடுப்பார் பிரகாஷ்ராஜ். நடிப்புன்னா எல்லாம் ஒண்ணுதான்.
இதிலே நாடகம் என்ன? சின்னத்திரை என்ன? வில்லன் என்ன? ஹீரோ என்ன? என்பார் திறந்த மனசுடன். இதே ஸ்டைலை இப்போது ஒரு சில நடிகைகளும் பின்பற்ற ஆரம்பித்திருப்பதால், சின்னத்திரை ஏரியாவில் ஒரே கொண்டாட்டம்!.
பிரபல சேனல் ஒன்றில் இடம் பெறும் முக்கிய நிகழ்ச்சியான சாகச நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் லட்சுமிராய். இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக போகாவிட்டாலும், இப்போதும் மார்க்கெட்டில் டிமாண்ட் இருக்கதான் செய்கிறது இவருக்கு. தமிழை விட மலையாளத்தில் இன்னும் கொஞ்சம் கிரேஸ். அப்படியிருக்கு ஏனுங்க சின்னத்திரை விசிட்? கேட்டால், படபடவென்று பொறிந்து தள்ளுகிறது பொண்ணு.
தாம் தூம் படத்தில் பெரிய ஹீரோவுடன் நடிச்சிட்டு இருக்கும் போது கூட சின்னத்திரை ஷோவில் கலந்து கொண்டவதான் நான். எனக்கு எந்த பாகுபாடும் இல்லை. அதே மாதிரிதான் இப்போ இந்த நிகழ்ச்சியிலேயும் கலந்துக்கிறேன். சினிமாவை விட மக்களிடம் இன்னும் எளிதாக போய் சேருகிற ஃபீல்டு சின்னத்திரைதான். இன்னும் பெரிய இடத்திற்கு போனாலும், நேரம் இருந்தா சின்னத்திரையில் என் பங்களிப்பு தொடரும் என்கிறார்.
இவராவது டம்பி பீஸ். எக்கச்சக்க சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ஜெனிலியாவே சின்னத்திரையில் ஒரு ஷோவை தொகுத்து வழங்குகிறார். ஆனால் தமிழ் சேனல்களில் அல்ல, இந்தியில்! எப்பூடீய்ய்ய்ய்...
நவம்பர் 2-ந் தேதி கோர்ட்டுக்கு போக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் அவதூறு நடிகர்கள். அந்த லிஸ்ட்டில் நடிகர் சத்யராஜும் இருக்கிறார்.
பேசியும் எழுதியும் வருகிறார்கள். எனது பத்ம ஸ்ரீ விருதை கூட பறிக்க சூழ்ச்சி நடக்கிறது. அதனால் நமது சங்கம் எனக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கெஞ்சினாராம். அதே கூட்டத்தில் கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் கருணாஸ், “அவர் பொது பிரச்சனைக்காக போராடி இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டால் சங்கம் துணைக்கு போகலாம். அவரோ வாய்க் கொழுப்பில் பேசி மாட்டிக் கொண்டார். அதற்கெல்லாம் நாம் துணை போக முடியாது. அவர் பேசியதற்கான பலனை அவரே அனுபவிக்கட்டும்” என்றாராம்.
அடுத்த நமிதாவாக்கிக் காட்டுகிறேன் என இயக்குனர் ஷக்தி சிதம்பரம் சூளுரைத்திருக்கிறார். அதற்கு ஏற்ப கிளாமர் காஸ்ட்யூமா? நீச்சல் உடையா? எதற்கும் தயார் என கவர்ச்சியில் பின்னுகிறார் ஹேமமாலினி.
இந்திரவிழா படத்தின் நாயகி. தற்போது நான் அவன் இல்லை, குரு சிஷ்யன் படங்களில் நடித்து வருகிறவரிடம் ஒரு ஜாலி பேட்டி.
உங்களுடைய நிஜப் பெயரே ஹேமமாலினியா இல்லை, முன்னாள் கனவுக் கன்னி ஹேமமாலினியை மனதில் வைத்து சினிமாவுக்காக வைத்த பெயரா?
சினிமாவுக்காக இந்திரவிழா டைரக்டர் ராஜேஷ்வர் வைத்த பெயர்தான் ஹேமமாலினி. அந்தப் பெயர் கொண்ட நடிகை சினிமாவில் புகழ்பெற்று இருந்ததால் அந்தப் பெயரை வைப்பதாகக் கூறினார். எனக்கு இன்னொருத்தர் பெயரில் நடிப்பது பிடிக்கவில்லை. அதனால் என்னுடைய நிஜப் பெயர் ஸ்ருதி பிரகாஷ் பெயரிலேயே நடிக்க விரும்புகிறேன்.
நடிப்பதற்காக ஸ்பெஷல் பயிற்சி எடுத்திருக்கிறீர்களா?
என்னுடைய அம்மா ஒரு அத்லெடிக் பிளேயர். கராத்தே நன்றாக தெரியும். நானும் அவர்களுடன் சேர்ந்து கராத்தேயில் பிரவுன் பெல்ட் வாங்கியிருக்கேன். பரத நாட்டியம், கதக் சின்ன வயசிலிருந்தே கத்துக்கிட்டு வருகிறேன். நடிப்பது என்று முடிவான பிறகு ஆக்டிங் கோர்ஸில் சேர்ந்து நடிப்பு பற்றி படித்தேன்.
ஆனால், தமிழ் இன்னும் படிக்கவில்லை போலிருக்கிறதே?
நான் முதலில் நடித்தது ஒரு மராட்டிய படம். தமிழில் வாய்ப்பு கிடைத்ததும் ஒரு டீச்சரை வைத்து தமிழ் கத்துக்கிட்டேன். இன்னும் சில மாதங்களில் உங்களைப் போல தமிழ் பேசுவேன், பார்த்துக் கொண்டே இருங்கள்.
உங்களுக்குப் பிடித்த தமிழ் நடிகர்?
தமிழில் நான் விரும்பிப் பார்த்த படம், கஜினி. அதில் சூர்யாவின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதேபோல் அசின்.
அவர்தான் உங்க ரோல் மாடலா?
என்னுடைய திறமையை நம்பி நடிக்க வந்திருக்கிறேன். கிடைக்கிற கேரக்டரை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே எண்ணம். ஆதனால் ரோல் மாடல் என்றும் யாரும் எனக்கு இல்லை.
உங்களுடைய சொந்த ஊர்...?
பூனா. மராட்டிய பொண்ணு நான். தமிழில் நடிப்பதால் இப்போது தமிழ்ப் பெண்.
கிளாமர் வேடங்களிலேயே நடிக்கிறீர்களே?
எனக்கு முதலில் கிடைத்தது கிளாமர் வேடம். தொடர்ந்து அந்த மாதிரி கேரக்டர்களே வருகிறது. மத்தபடி, நடிப்பை வெளிப்படுத்தும் கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
நீச்சல் உடை...?
இந்திரவிழாவில் நீச்சல் உடையில் நடித்ததிலிருந்து அது பற்றி கேட்கிறார்கள். நீச்சல் காட்சியில் சேலை கட்டி நடிக்க முடியாதல்லவா? கதைக்கு தேவை என்பதால் மட்டுமே அப்படி நடித்தேன்.
குரு சிஷ்யனில் நீங்கள் யாருக்கு ஜோடி, சத்யராஜுக்கா? சுந்தர் சி.க்கா?
சுந்தர் சி. ஜோடியாக நடிக்கிறேன்.
உங்களை அடுத்த நமிதாவாக்கி காட்டுகிறேன் என்று ஷக்தி சிதம்பரம் கூறியிருக்கிறாரே?
இப்போது கிளாமர் வேடங்கள்தான் எனக்கு கிடைத்திருக்கிறது. வெரைட்டியான ரோல்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. நமிதாவை எனக்குப் பிடிக்கும். அவருடன் போட்டி என்று சொல்ல முடியாது. தவிர கவர்ச்சியை நம்பி அதிக காலம் தாக்குப் பிடிக்க முடியாதே.
இப்போது எந்தெந்த படங்களில் நடிக்கிறீர்கள்?
நான் அவன் இல்லை இரண்டாம் பாகம், குரு சிஷ்யன். இன்னும் இரண்டு மூன்று படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பொங்கலுக்கு எப்படியும் அசல் படத்தை கொண்டு வருவது என்பதில் படத்தின் இயக்குனர், ஹீரோ, தயாரிப்பாளர் என அனைத்து தரப்பும் உறுதியாக இருக்கிறது.
விட்டால் ஜெயம் ரவியின் இடத்தைப் பிடிப்பார் போலும் தனுஷ். ஜெயம் ரவி கூட ரீமேக் படங்களில்தான் தொடர்ந்து நடித்து ரீமேக் ரவி என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார்.
நடித்து வெற்றி பெற்ற ‘யாரடி நீ மோகினி’ படம் தெலுங்கில் ‘மாட்லக்கு அர்த்தவேர்லு’ என்ற தலைப்பில் வெளியான படமே. இதைத் தொடர்ந்து இப்போது தனுஷ் நடித்து வரும் குட்டி படமும் தெலுங்கில் வெற்றி பெற்ற ‘ஆர்யா’ படத்தின் ரீமேக்தானாம். இதில் ஸ்ரேயா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்போது லேட்டஸ்டாக தனுஷ் தெலுங்கில் ‘ரெடி’ என்று வெளியாகி சக்கைபோடு போட்ட படத்தை வாங்கி அதன் ரீமேக்கில் நடிக்க உள்ளாராம். இந்தப் படத்தையும் மித்ரன் ஜவஹர்தான் இயக்குகிறாராம். கதாநாயகியை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.
மோசர் பேர், ப்ளூ ஓசனுடன் இணைந்து தயாரித்திருக்கும் படம், கண்டேன் காதலை. பரத், தமன்னா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
வித்யாசாகர் இசையமைத்துள்ளார். பாடல்கள் நா.முத்துக்குமார், யுகபாரதி, கார்க்கி.
காலா காலமாக கஷ்டப்பட்டு நடித்துத்தான் பார்க்கிறார் நடிகர் விக்னேஷ். ஆனால் எந்தப் படமும் ஹிட் கொடுத்ததில்லை இவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘குடியரசு’ படமும் இப்படித்தான் வந்த வேகத்தில் ஏப்பம் விட்டு சுருண்டு கொண்டது.
’ என அதிரடி படங்களை இயக்கிய சஞ்சய் ராம் அதிரடிகளுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு காமெடி படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இந்தப் படத்தில் தான் விக்னேஷ் ஹீரோவாக நடிக்கப் போகிறார். ‘கௌரவர்கள்’ என்று படத்திற்குத் தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை காட்சிகளை யாருமே யூகிக்க முடியாத அளவுக்கு திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையை அமைத்திருக்கிறாராம் சஞ்சய்ராம்.
வாழ்க்கையே ஒரு பயணம் தானே. பயணம் செல்லும் வாகனம், போகின்ற தூரம், எடுத்துக் கொள்கிற நேரம், உடன் பயணிக்கிற மனிதர்கள், சந்திக்கிற சம்பவங்கள் இவற்றைப் பொறுத்தே அந்தப் பயணம் சுகமாகவோ சோகமாகவோ அமையும்.
சூழலில் கதாநாயகன் தன்னுடன் வந்த பெண்ணை கூடவே அழைத்துச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பெங்களூரில் இருந்து மும்பை வரையில் காரில் செல்லும் அவர்களின் பயணமும் அது சார்ந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும்தான் கதை. இது ஒரு யதார்த்தமான கமர்ஷியலான சுவையான காதல் கதையாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர் லிங்குசாமி. இதற்காகவே சென்னை, பாண்டிச்சேரி, புனே, ஹைதராபாத் போன்ற இடங்களில் அலைந்து திரிந்து படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்களாம்.
எவனோ ஒருவன், யாவரும் நலம் மாதிரியான வித்தியாசமான சப்ஜெக்ட்டுகளில் மட்டுமே நடிப்பது என்பதில் எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்காக இருக்கிறார் மாதவன்.
னே உருவாக்க தீர்மானித்திருக்கிறார்.
ஒரே இயக்குனரின் படத்தில் எந்த ஹீரோவும் தொடர்ந்து நடிப்பதில்லை. இரண்டு பட இடைவெளியாவது இருக்கும். விஜய், அஜித் மட்டுமல்ல கமல், ரஜினியின் பழக்கமும் அதுதான்.
இந்திப் படம் ஒன்றின் ரீமேக் உரிமையை பிரகாஷ்ராஜ் வாங்கியிருப்பதாக சில வாரங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தோம். நானா படேகர் நடித்தப் படம் என்பதையும் அதில் தெரிவித்திருந்தோம்.
தமிழின் முன்னணி நடிகையாக இருந்து இந்தியில் பட வாய்ப்பு வேட்டைக்காக சென்றவர் நடிகை அசின். இவர், அபிஷேக் பச்சனுடன் இணைந்து இந்திப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
இல்லாத காரணத்தால் அந்த வாய்ப்பு அசினுக்கு கிடைத்துள்ளது. இதற்கிடையில் அசினுக்கு மற்ற ஹீரோக்கள் நல்ல நல்ல பெர்ப்யூம்களை ரெக்கமன்ட் செய்கிறார்களாம். காரணம் இல்லாமல் இல்லை, அசின் மீது வியர்வை நாற்றம் அதிகமாக இருக்கிறதாம். இதைக் குறைத்தால்தானே நெருங்கி நடிகர்களால் நடிக்க முடியும்...? வேறுவழியில்லாமல் இந்தி நடிகர்கள் பெர்ப்யூம் பேரை தேடிப்பிடித்து அசினிடம் சொல்லி வருகிறார்களாம்.
சென்னை 28 படத்தில் அறிமுகம் ஆன விஜயலட்சுமி அதைத் தொடர்ந்து ‘அஞ்சாதே’ படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் ஹிட் வரிசையில் சேர்ந்துவிட இப்போது ‘அதே நேரம் அதே இடம்’ என்ற படத்தில் கிளாமர் வேடத்தில் நடித்து வருகிறாராம்.
சென்சார்போர்டு குழு யுஏ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்களாம். இந்தப் படத்தை ராமகிருஷ்ணன் தமது லஷ்மி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநர் பிரபு, எஸ்.ஜெ.சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
நடிகை ஷம்மு ‘மாத்தியோசி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நான்கு கதாநாயகர்கள். அவர்களுக்கு இணையாகவே தமது கேரக்டரும் பேசப்படும் என்று குறிப்பிடும் ஷம்மு இப்போது ‘மயிலு’ படத்திற்காகக் காத்திருக்கிறார்.
இரண்டும் வெளிவந்துவிட்டால் தனது நடிப்பு பற்றி இன்னும் அதிகமாக ரசிகர்களும் திரையுலகமும் தெரிந்து கொள்ளும் என்கிறார். மேலும், நான் பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவில் நடிக்க வரலை... நல்ல படங்களில் நடிக்க வேண்டும் அதனால் திரையுலகில் நிலைத்து நிற்கவேண்டும் என்பதற்காகவே சினிமாவுக்கு வந்தேன்...’ என்றும் அழுத்திச் சொல்கிறார் ஷம்மு.
மோகன்லாலுடன் நடிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார் பிருத்விராஜ். அதனால் அவருக்குப் பதில் திலீப்பை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
குகிறார். இதில் ஹீரோ மோகன்லால். அவருடன் நடிக்க பிருத்விராஜிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், மோகன்லாலுடன் நடிக்க பிருத்விராஜ் மறுத்து விட்டார். தனி ஹீரோவாக நடித்து வருவதால் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க அவர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
கே.விஆனந்தின் அடுத்த அயன் மேன் யார் என்பதற்கு விடை கிடைத்திருக்கிறது. அவர் வேறு யாருமில்லை, சூர்யாவின் தம்பி கார்த்தி.
சின்னத்திரை ஜோடிகளான கணேஷ்- ஆர்த்தி திருமணம் குருவாயூர் கோவிலில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நடைபெற்றது.
நடித்தவர்கள். இந்த நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பானது. வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இயக்குநர் கே. பாலசந்தர், பி.வாசு, இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், நடன இயக்குநர் கலா, தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்திரி, ஏ.வி.எம். சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
படம் நடிக்க வேண்டியது... அப்புறம் ஏதாவது ஒரு பிரச்சனையைக் கிளப்ப வேண்டியது... இந்த லிஸ்டில் லேட்டஸ்ட்டாக இடம் பிடிக்கிறார் நிலா. ‘ஜெகன்மோகினி’யில் நமீதாவுடன் இணைந்து இவர் நடித்திருக்கிறார்.
ட்டுத்தள்ள, ஏகத்துக்கும் குஷியாக இருந்திருக்கிறார் நிலா. அப்பாடா... இப்படி ஏராளமான காட்சிகளை வைத்தால் நம்மதான் இதுல மெயின் ஹீரோயின் என்று நினைத்தவர் படத்தைப் பார்த்து ஷாக் ஆகி இருக்கிறார். பின்னே ஆகமாட்டாரா...? இவர் நடித்ததில் பெரும்பாலான காட்சிகளை வெட்டி எறிந்துவிட்டார்களாம். இது குறித்து நிலா, தனக்கு வேண்டியவர்களிடம் எல்லாம் ‘கடைசியில என்னை ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டார்களே...’ என்று வருத்தப்பட்டுச் சொல்கிறாராம்.
கதை நல்லா இருந்தாதான் சார் படம் ஓடும்... நான் பிகினி டிரஸ் போட்டா படம் ஓடிருமா என்ன? படத்தின் வெற்றிக்கும் கிளாமருக்கும் சம்பந்தமே இல்லை...’ நல்லவேளை நம்மை அடிக்காத குறையாக சொல்கிறார் பூனம் பஜ்வா.
த படத்திலும் அதற்கு அடுத்து இப்போது ‘கச்சேரி ஆரம்பம்’ படத்திலும் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜீவா உங்களை சிபாரிசு செய்தாராமே என்று சொன்னால்... அப்படில்லாம் இல்லைங்க... அவர் எனக்கு நல்ல ஃப்ரெண்ட் அவ்வளவுதான்... மத்தபடி கதாநாயகியை இயக்குநர்தானே தேர்வு செய்வார் என்று கேட்கிறார் இவர். ‘சினேகா, அசின் எல்லாம் பிகினியிலயா வந்தாங்க...’ என்றும் கேட்கிறார் பூனம் பஜ்வா. கோவா வந்தால் தான் தெரியும் சினேகா பிகினி போட்டிருக்கிறரா இல்லையா என்று...
இயக்குனர்களின் கற்பனையை கேட்டால் நமக்கே கிலி பிடிக்கிறது. சமீபத்தில் அறிமுக இயக்குனர் திரு செய்த வேலையால் நாள் முழுக்க ஷவருக்கடியில் நனைந்து கொண்டிருந்தார் நீது சந்திரா.
தீராத விளையாட்டு பிள்ளையில் விஷாலுடன் மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நீது சந்திரா. கிளாமராக நடிக்க வேண்டும் என்று முதலிலேயே அக்ரிமெண்ட் போட்டுதான் மூவரையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
சமீபத்தில் நீது சந்திரா நடித்த பாடல் காட்சியை எடுத்தார்கள். பாத் டப்பில் நீது நீந்துவதுபோல் காட்சி. ஏற்கனவே ரேஷனில்தான் காஸ்ட்யூம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இயக்குனர் திருவுக்கு ‘ஹாட்’ போதவில்லை. குளியல் தொட்டியில் தண்ணீருக்கு பதில் சிவப்பு மிளகாயை மிதக்கவிட்டால் என்ன என்று விபரீதமாக ஒரு ஐடியா தோன்றியிருக்கிறது.
மறு நிமிடம் அதனை செயல்படுத்தியிருக்கிறார்கள். காட்சி முடிந்த பிறகு நீதுவின் உடம்பெல்லாம் எரிச்சல். ஓடிப் போய் ஷவருக்கடியில் நின்றவர்தானாம். பேக்கப் சொன்ன பிறகுதான் வெளியே வந்திருக்கிறார். திரு இயக்கும் படம் என்றால் இப்போதே தெறித்து ஓட தயாராகி வருகிறார்கள் நடிகைகள்.
தனது பிறந்த நாளையொட்டி பாலிவுட் பிரபலங்களுக்கு பெரிய விருந்தாக வைத்து கலக்குகிறார் ஆசின். மலையாளத்திலிருந்து கிளம்பி தெலுங்கு , தமிழ் என தேட்டையைப் போட்ட நடிகை ஆசின் இப்போது இந்தியில் குடியேறியுள்ளார்.
நடிகர் ஆர்.கே. ‘எல்லாம் அவன் செயல்’ படத்திலும் ‘அழகர் மலை’ படத்திலும் கதாநாயகனாக நடித்தவர். அவர் ஒரு தொழிலதிபரும் கூட. அவர் சென்னை, தி.நகரில் ஒரு ஓட்டலைத் திறந்துள்ளார்.
தார். இந்த ஓட்டலின் பெயர் ‘சாப்பிடலாம் வாங்க’ என்பதாகும். இந்த உணவகம் பற்றி ஆர்.கே. ‘அருமையான, உயர்தரமான உணவு தரவேண்டும் என்பது மட்டுமே எங்கள் குறிக்கோள். புகழ்பெற்ற உணவகங்களுக்கு சவால் விடும் வகையில் எங்கள் உணவகத்தின் சுவையும், சேவையும் இருக்கும். இரண்டு வருடகால முயற்சியின் வெற்றிதான் இது. நடிப்பும் தொழிலும் எனது இரு கண்கள். அடுத்து பிரபலமான இயக்குநர் ஒருவர் இயக்கத்தில் நடிக்க உள்ளேன்...’ என்று சொன்னார். உணவகத்தில் ஆர்.கே.வும் வடிவேலும் உணவருந்தி மகிழ்ந்தனர். ஒரு கட்டத்தில் ஆர்.கே. வடிவேலுக்கு ஊட்டிவிட அந்த இடமே கலகலப்பாக இருந்தது.
ஜெய் ஆகாஷ் இயக்கி நடித்துள்ள படம் ‘காதலன் காதலி’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய பாடலாசிரியர் சினேகன், ‘ஜெய் ஆகாஷ்... இஷ்டப்பட்டு கஷ்டப்படுபவர்’ என்று பாராட்டினார்.
ஸ்ரீ பிரசாத் வெளியிட துணை மேயர் சத்யபாமா பெற்றுக் கொண்டார். பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெய் ஆகாஷ் ‘தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துவிட்டேன். முன்னணி நடிகர், இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதற்கான முழு முயற்சியில் இப்போது இறங்கியிருக்கிறேன். எனது முழு திறமையையும் வெளிப்படுத்தி நல்ல படங்களைக் கொடுத்து விரைவில் முன்னணி நடிகனாவேன். இதற்கு இந்தப் படம் உறுதுணையாக நிற்கும்’ என்றார்.
செல்வாவிடமிருந்து திருமண பந்தத்தை துண்டித்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை சோனியா அகர்வாலிடம் துளிர் விட்டிருக்கிறது.
நகுல் இடத்தை பிடிப்பார்கள் போல் தெரிகிறது அஜீத்தும், ஜெயம் ரவியும்! ஹையோடா என்று அவசரப்படாதீர்கள். இது தண்டனை சட்டம் பெப்சி விதிகளுக்கு உட்பட்டது.
நிலைமை அப்படியிருக்க, அஜீத்தும், ஜெயம் ரவியும் கலந்து கொள்ளவில்லையே? அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் என்ன என்று யோசித்து வருகிறார்களாம் பெப்சியில்.
ரஜினி, கமல் படங்களை ரஷ்ய சப் டைட்டிலுடன் ரஷ்யாவில் வெளியிடப் போகிறார்கள் என்று பல மாதங்கள் முன்பு சேதி சொல்லியிருந்தோம். அதற்கான வேலைகள் தற்போது ஜரூராக நடந்து வருகின்றன.
ற பெயரில் இந்தியில் டப் செய்து, ரஷ்ய சப் டைட்டிலுடன் திரைப்பட விழாவில் திரையிட திட்டமிட்டுள்ளனர். அப்படியே படத்தை பாலிவுட்டில் வெளியிடவும் முடிவு செய்துள்ளனர். Designed by kandeepan
Converted into kandee Templates by Theme Craft